Friday, March 27, 2009

சின்ன புறா ஒன்று

Get this widget | Track details | eSnips Social DNA


http://www.youtube.com/watch?v=fcuJKKem0eQ

My all time favorite song

படம்: அன்பே சங்கீதா
பாடியவர்கள்: பாலு, சைலஜா
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா
பாடாலாசிரியர்: கவிஞர். வாலி

சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
இன்று நாதங்கள் கேட்டாயோஓஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மாஆஆஆஆ

சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்

ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆஆ..

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா? அல்லது சோகங்களா?
சொல்லம்மாஆஆஆஆ

சின்ன புறா ஒன்று எண்ணக்கணாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே.ஏஏஏஏ
நூறாண்டுகள் நீ வாழ்கவே..ஏஏஏஏ

Sunday, March 22, 2009

உனக்கென உனக்கென பிறந்தேனே

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..)

Friday, March 20, 2009

வானுக்கு தந்தை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Song : Vaanukku Thanthai evanO
SPB with L R Anjali
Music: VijayaBaskar
Lyric: Poovai Sengkuttuvan

வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்ஹா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்ஹா பெற்ற பிள்ளை தானே யாரும்
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi
வானுக்குத் தந்தை எவனோ...

ந‌பிக‌ள் பெருமான் மெக்ஹா விட்டு மதீனா
நடந்து பட்ட‌ துன்பம் நமக்கெல்லாம் வருமா
ந‌பிக‌ள் பெருமான் மெக்ஹா விட்டு மதீனா
நடந்து பட்ட‌ துன்பம் நமக்கெல்லாம் வருமா
அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்
ஆயிரம் தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம்
அவ‌னுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை
அநாதி யாருமில்லை அவனேதான் தந்தை
அநாதி யாருமில்லை அவனேதான் தந்தை
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi
வானுக்குத் தந்தை எவனோ..

கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை
போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை
கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை
போகின்ற வ‌ழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை
வானில் மூன்றாம் பிறை வ‌ரும்போது
வாச‌லில் துண்டை இட்டு திருக் குர்ரான் ஓது
துய‌ர‌த்தை அங்கே சொன்னால் சுக‌மாகும் சிந்தை
அநாதி யாருமில்லை அவனேதான் தந்தை
அநாதி யாருமில்லை அவனேதான் தந்தை
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi
La ilaaha ‘ill-Allah Muhammad-ur-Rasool-ullah yhi

வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்ஹா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்ஹா பெற்ற பிள்ளை தானே யாரும் !

ஆலோலம் கிளி தோப்புல


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்
துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ
காதல் விழாக் காலம் கைகளில் வாவா ஈர நிலாப் பெண்ணே
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
வீணை புது வீணை சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய்
பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

Monday, March 2, 2009

ஓ நெஞ்சே நீதான்

My all time favorite song


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓ நெஞ்சே நீதான்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
.........


சங்கீத ஜாதிமுல்லை (காதல் ஓவியம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளினீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே...

(ஸ்வரங்கள்) .........