Showing posts with label Panimalar. Show all posts
Showing posts with label Panimalar. Show all posts

Thursday, May 20, 2010

paniyum naane malarum



பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்...ஹா
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே..கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்கமும் போய் வருவோம்
வருவோம்..வருவோம்...வருவோம்....
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்

லலல்லலலலல் லா லால்ல்லல
லலல்லலலலல் லா லால்ல்லல

மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு...ஹா
சந்தனம் பூச சங்கதி பேச
காவியம் பல தோன்றும் தோன்றும்
தோன்றும்....தோன்றும்...தோன்றும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
லலலலல்லல லலல்லலலல்ல
பபபபப்பபபபப் லல்லலல்லலல்லல
பப்பபப்ப லலல்லலல் பப்பபபா லா ல லா